உ.பி.: உத்தர பிரதேசத்தில் பேருந்தும், லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் குண்டர்கி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மொராதாபாத் மற்றும் ஆக்ரா நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், பேருந்தும், லாரி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.