அந்தியூர்: ஈரோடு மாவட்டம் கோபி நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சுமதி. இவரது மகன் அருண் பாலாஜி. இவர்களுக்கு சொந்தமாக அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி பெஜலட்டியில் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியை சேலத்தைச் சேர்ந்த முருகேசன் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். தொடர்ந்து கல்குவாரி இயக்க அனுமதி கிடைக்காததால் அங்கிருந்த வாகனங்கள் மற்றும் தேவையான பொருட்களை எடுத்துச் சென்றவர், மீதி இருந்த வெடிபொருட்களை அங்கிருந்த ஒரு அறையில் வைத்திருந்தார்.