சென்னை: தமிழகம் முழுவதும் நடந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை மதுரை மாவட்டத்தில் புதிய கிரானைட் குவாரிகள் தொடங்கவோ அல்லது உரிமம் வழங்கவோ கூடாது என கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கிரானைட் குவாரிகள் உரிமம் வழங்கும் விவகாரத்தில் அனைத்தும் முறைப்படி தான் நடத்தப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக எதுவும் பின்பற்றப்படவில்லை.