ஆளுங்கட்சி அறிக்கையை குடியரசு தலைவர் படிக்கிறார்; குடியரசு தலைவரின் உரை ஏமாற்றம் அளிக்கிறது!: திருமாவளவன்

சென்னை: குடியரசு தலைவரின் உரை ஏமாற்றம் அளிக்கிறது என்று திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். சென்னை அம்பேத்கர் திடலில் முத்துக்குமார் படத்திற்கு திருமாவளவன் மரியாதை செலுத்தினார். அச்சமயம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மக்கள் விரோத சட்டங்களை எதிர்க்கும் வகையில் குடியரசு தலைவர் உரை அரங்கேறியுள்ளது. ஆளுங்கட்சி அறிக்கையை குடியரசு தலைவர் படிக்கிறார். வேளாண் சட்டங்கள் தொடர்பாக மோடி பேசுவதை குடியரசு தலைவரும் பிரதிபலிக்கிறார் என குறிப்பிட்டார்.

Related Stories: