சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக திறக்கலாம், ஆனால் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட இல்லம், நினைவு இல்லமாக திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து தீபக் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி சேஷசாயி முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தன.