ரஜினியின் நல்ல எண்ணம், நல்ல மனது, தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள் :அர்ஜுனமூர்த்தி கருத்து

சென்னை: ரஜினிகாந்த் ஆசிர்வாதம் மட்டுமே போதும்; மாற்றத்தின் சேவகனாக விரைவில் வருவேன் என்று அர்ஜுனமூர்த்தி கூறியுள்ளார். ரஜினிகாந்தின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம் என அர்ஜுனமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாஜகவில் இருந்து விலகி தொடங்கப்படாத ரஜினியின் கட்சியில் சேர்ந்த அர்ஜுன மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நீண்ட கால அரசியல் மாற்றத்தின் நிறைவான நிச்சயமாக நிகழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து நமது தமிழகத்தில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், இப்ப இல்லனா எப்போது என்று சொல்லிய சூப்பர் ஸ்டார் அவர்களின் நல்ல எண்ணம், நல்ல மனது, நம் தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள். ஒரு நடிகராக அவரது தொழில் தர்மத்தின் காரணமாக அவரது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் வர கூடாது என்ற காரணத்தால் அவரது பெயர் புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என்று நான் விரும்புகிறேன். எனவே என்னை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்பி நாட்டிற்கு அறிமுகம் செய்த அவர்களின் பாதம் தொட்டு வணங்கி நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புகிறேன்.

இந்த சூழ்நிலையிலும் எனக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். அரசியலில் இல்லை என்றாலும் எனக்கு தலைவர் என்பதையும் தாண்டி நானும் ஒரு ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் . அந்த அக்கறையில் அவரது புகழுக்கு எந்த இடத்திலும் கெட்ட பெயரை நாம் ஏற்படுத்த மாட்டோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆசிர்வாதம் மட்டுமே போதும், அவர்களின் ஆசையை நிறைவேற்றுவோம். விரைவில் மாற்றத்தின் சேவகனாக உங்கள் முன் ” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ரஜினியை முன்வைத்து அர்ஜுன மூர்த்தி அரசியலில், தனிக்கட்சியுடன் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories: