போராடி வரும் விவசாயிகளை மதிக்காமல் மத்திய அரசு உதாசீனப்படுத்தி வருகிறது: மு.க.ஸ்டாலின்

சென்னை: போராடி வரும் விவசாயிகளை மதிக்காமல் மத்திய அரசு உதாசீனப்படுத்தி வருகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பேச்சுவார்த்தை என்ற பெயரால் பாஜக அரசு நாள் கடத்தும் நாடகங்களை மட்டுமே நடத்தியது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கைகளையும் பாஜக அரசு செய்யவில்லை எனவும் குற்றம் சாடினார்.

Related Stories: