கீழக்கரை : கீழக்கரை அருகே மயானத்திற்கு செல்ல பாதை வசதியில்லாததால், ஊருணி வழியாக தண்ணீருக்குள் இறங்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பெரியபட்டினம் அருகே தெற்கு புதுக்குடியிருப்பு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு சுடுகாட்டான்பட்டி மயானத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். சமீபத்தில் பெய்த மழையால் மயான பாதையில் தற்போது 6 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.