சென்னை: காசிமேடு கடற்கரை பகுதியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ.120 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதை நேற்று மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் ஆய்வு செய்தார். சென்னை மீன்பிடி துறைமுகம் காசிமேடு கடற்கரை பகுதியில் நாளுக்கு நாள் ஏற்படும் வளர்ச்சியின் காரணமாக படகுகள் நிறுத்துமிடங்கள், மீன்கள் சில்லறை விற்பனை பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. துறைமுகத்திற்கு உள்ளே வரக்கூடிய அணுகு சாலைகள் மிகவும் பழுதடைந்து இருப்பதாலும், புதிய சாலைகள் அமைப்பது, துறைமுக உட்பகுதியில் மீன்களை பதப்படுத்த குளிரூட்டப்படும் நிலையங்கள், பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ.120 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.