சென்னை: கடந்த 1997ம் ஆண்டு ஆயுதப்படை பிரிவில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்த சரவணபாபு என்பவர், காவல்துறை ஒதுக்கீடு செய்த குடியிருப்பில் பணி வரைமுறைகளை மீறி சக பெண் காவலருடன் தவறான கண்ணோட்டத்தோடு இருந்ததாக ஆயுதப்பிரிவு ஐ.ஜி அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சரவணபாபு தாக்கல் செய்த வழக்கை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார். சரவணபாபு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், தோழியை பார்க்க வந்த பெண் காவலர் அவர் இல்லாததால், பக்கத்து வீட்டில் சாவியை கொடுத்து விட்டு சென்றாரா என கேட்கவே சரவணபாபு வீட்டிற்குள் வந்தா்ர். அந்த நேரத்தில் யாரோ வெளியில் கதவை பூட்டிவிட்ட நிலையில், அதிகாரிகள் வந்த போது நடந்ததை கூறியும் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக வாதிட்டார்.