உலகம் பிரேசிலில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை கர்ப்பிணி பெண்களுக்கு பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது சகாதாரத்துறை May 12, 2021 சுகாதார துறை பிரேசில் கொரோனா அஸ்ட்ராஜெனெகா தின மலர் பிரேசில்: பிரேசிலில் கர்ப்பிணி பெண்களுக்கு அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போட்டுக் கொள்ள அந்நாட்டு அரசு இடைக்கால தடை விதித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த நாட்டில் அஸ்ட்ரா ஜெனகா, சினோவாக் மற்றும் பைசர் ஆகிய 3 நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு வலிப்பு நோய் ஏற்பட்டு கடந்த 10 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவே காரணம் என கூறப்படுகிறது. உயிரிழந்த பெண் 23 வார கர்ப்பிணியாக இருந்துள்ளார். பிரேசிலில் வேறு எந்த கர்ப்பிணி பெண்களுக்கும் இது போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை. பிரேசில் நாட்டில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள இடைக்கால தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அங்கு பயன்பாட்டில் இருக்கும் மற்ற தடுப்பூசிகளை கர்ப்பிணி பெண்கள் செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் மிக மோசமான பாதிப்புகளை பிரேசில் நாடு சந்தித்து வருகிறது. … The post பிரேசிலில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை கர்ப்பிணி பெண்களுக்கு பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது சகாதாரத்துறை appeared first on Dinakaran.
லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை: 274 பேர் பலி, 1000 பேர் படுகாயம்: ஊரை காலி செய்து தலைநகரில் மக்கள் தஞ்சம்
லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல் நடத்தியதில் 187 பேர் பலி: 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியில் மோடியை சந்தித்த பாலஸ்தீன அதிபர்: ஐ.நா உறுப்பினராக்க இந்தியா ஆதரவு
நியூயார்க்கில் நடந்த ‘மோடியும் அமெரிக்காவும்’ நிகழ்ச்சி; ‘ஏஐ’ என்றால் ‘அமெரிக்கா – இந்தியா’ என்று அர்த்தம்: இந்திய வம்சாவளிகளுடன் பிரதமர் மோடி உரை
சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்களின் ஒற்றுமையே புதிய தொடக்கத்தின் அடித்தளம் : இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசநாயக உரை!!