குன்றத்தூர்: குன்றத்தூரில் பகுதியில் வாகன விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எமன் வேடம் அணிந்து நூதன விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். தமிழகத்தில் 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, வாகன ஓட்டிகள் விபத்தில்லாமல் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என வழியுறுத்தப்படுகிறது. இதையொட்டி, குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் இணைந்து அரசு பஸ் டிரைவர்களுக்கும், இருசக்கர வாகன ஓட்டிகளிடமும் ஹெல்மெட் அணிவதன் அவசியம், வாகனங்களில் அதிக பாரம் ஏற்றக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கார், வேன்களை ஓட்டும்போது டிரைவர்கள் சீட் பெல்ட் முறையாக அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.