மயிலாடுதுறை: பயிர் காப்பீடு வழங்க கோரி தமிழக விவசாய சங்கத்தினர் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 35,000 பெற்றுக் கொடுக்கக்கோரி தமிழக விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.