அறந்தாங்கி: புதுகை அருகே மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்களை தேடி 5 விசைப்படகுகளில் 20 மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து கடந்த 18ம்தேதி காலை 214 விசைப்படகுகளில் 900 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் மெசியா(30), நாகராஜ்(52), செந்தில்குமார்(32), மண்டபத்தை சேர்ந்த சாம் (28) ஆகிய 4 மீனவர்கள் ஒரு விசைப்படகில் சென்றனர். கோட்டைப்பட்டினத்திலிருந்து சென்ற 214 படகுகளில், 213 படகுகளில் சென்றவர்கள் கரை திரும்பினர். ஆனால் ஆரோக்கியசேசுவுக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற 4 பேரும் கரை திரும்பவில்லை. இதுகுறித்து சகமீனவர்கள் மேற்கொண்ட விசாரணையில், ஆரோக்கியசேசுவின் விசைப்படகை இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதில், படகு கடலுக்குள் மூழ்கியழ, உடனே மீனவர்கள் மீன்வளத்துறையின் அனுமதியோடு 3 விசைப்படகுகளில் 12 மீனவர்கள், கடலில் தேடி சென்றனர். ஆனால், கண்டுபிடிக்க முடியாமல் மீண்டும் கரை திரும்பினர்.