சென்னை: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சைதாப்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் செயல் தலைவர் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்பி. தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சி.டி.மெய்யப்பன், கோபண்ணா, செல்லகுமார், மாவட்ட தலைவர்கள் முத்தழகன், எம்.எஸ்.திரவியம், ரஞ்சன்குமார், ஆலந்தூர் நாஞ்சில் பிரசாத், சிவ.ராஜசேகரன், ஜி.டில்லி பாபு, அடையாறு துரை, ஏ.ஜி.சிதம்பரம், ஆர்.எஸ்.செந்தில் குமார், திருவேற்காடு லயன் டி.ரமேஷ், சுந்தரமூர்த்தி நாகராஜன் முன்னிலை வகித்தனர்.