தொட்டபெட்டாவில் பனிமூட்டம் இயற்கை காட்சியை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி: ஊட்டி தொட்டபெட்டா சிகரத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் பனிமூட்டம் காரணமாக இயற்கை காட்சிகளை காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.  தொடர் விடுமுறையால் ஊட்டிக்கு வந்திருந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா மலை சிகரத்தை காண அதிக ஆர்வம் காட்டினார்கள்.

ஏராளமான வாகனங்கள் சென்று வந்ததால் தொட்டபெட்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்று காட்சிமுனைக்கு சென்றனர். கடும் பனிமூட்டம் நிலவிய நிலையில் அங்குள்ள காட்சி கோபுரத்தில் இருந்து தொலைநோக்கி மூலம் இயற்கை காட்சிகளை பார்க்க முடியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும் பனிமூட்டம் மற்றும் சாரல் மழையில் நனைந்த படியே ரசித்தனர்.

Related Stories: