ஆவடி: ஆவடி அடுத்த பொத்தூர் அல்ட்ராமார்டன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் பிரியதர்ஷினி (18). இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் லேப் டெக்னீஷியனாக முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமதியம் பிரியதர்ஷினி, தாய் விஜயலட்சுமி, தங்கை நித்திய (16), மற்றும் இரண்டு தோழிகளுடன் அதே பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளிக்கச் சென்றார். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது பிரியதர்ஷிணியும் 2 தோழிகளும் ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டனர். இதை பார்த்த தாய், தங்கை சத்தம்போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளனர். அவர்கள் ஓடிவந்து முதலில் 2 தோழிகளை உயிருடன் மீட்டனர். அதன் பின்பு பிரியதர்ஷினியை குளத்தில் இருந்து வெளியில் கொண்டுவந்தபோது பிரியதர்ஷினி, மூச்சு பேசின்றி கிடந்தார்.