சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. கொரோனா தொற்று பரவல் உள்ள காரணத்தினால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை சில திரையரங்குகள் மீறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அயனாவரம் முத்தம்மன் கோயில் தெருவில் உள்ள கோபிகிருஷ்ணா திரையரங்கில் மாஸ்டர் படம் வெளியானது. அந்த தியேட்டரில் உள்ள கோபிகிருஷ்ணா ராதா ருக்மணி என மூன்று திரையரங்கிலும் இப்படம் வெளியானது. தமிழக அரசு அறிவித்துள்ள 50 சதவீத இருக்கைகள் என்ற உத்தரவை மீறி அளவுக்கு அதிகமாக டிக்கெட்கள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.