காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் பைக்குகளை திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் கங்கை கொண்டான் மண்டபம், குமரக் கோட்டம் பஸ் நிலையம் உள்பட பல பகுதிகளில் பைக்குகள் திருடுபோயின. இதுதொடர்பாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதை தொடர்ந்து, சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார், நகரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் நேற்று அதிகாலையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த ஒரு வாலிபரை மறித்து நிறுத்தி விசாரித்தனா்.