போடி: போடி மெட்டுச்சாலையில் நேற்று பாறைகள் சரிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் கலக்கத்துடன் சென்றனர்.தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் சாலையாக போடி மெட்டுச்சாலை உள்ளது. குறுகிய சாலையாக இருந்த இந்த சாலையை கடந்த 2014ல் விரிவாக்கம் செய்தனர். இதையொட்டி சாலையோர பாறைகளை தகர்த்து, உயரமான தடுப்புச்சுவர்கள அமைத்து, மழைநீர் வடிந்தோட சிறுபாலங்களை அமைத்தனர். இந்நிலையில், மழை காலங்களில் அடிக்கடி மரங்களோடு பாறைகளும் சரிந்து விழுகின்றன. நேற்று காலை 4வது கொண்டை ஊசி வளைவை தாண்டி, ஆகாசப்பாறை அருகில் இருந்த பாறைகள் சரிந்து ரோட்டில் விழுந்தன.