சென்னை : ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்திற்கு முந்திய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படும். போகியன்று பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தும் நிகழ்வுகள் நடைபெறும். அந்த வகையில் இன்று அதிகாலை முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பொருட்களை எரித்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் கடந்த 50 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் வேளாண் சட்ட நகலை எரித்து போகி பண்டிகை கொண்டாடி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது