சென்னை: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், மத்திய நுகர்வோர் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் தான்வே ராவ் சாஹிப் தாதாராவ் நேற்று குடும்பத்துடன் தரிசனம் செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.ஒரு தமிழக குடிமகன் மகாராஷ்டிராவுக்கு சென்றால், அங்கு அவருக்கு புதிய அட்டை பெற வேண்டியிருந்தது.