சென்னை: கொரோனா நோயாளிகள் மற்றும் டாக்டர்களுக்கு உணவு வழங்கிய ஓட்டல் உரிமையாளர்களுக்கு ரூ.300 கோடியை தமிழக சுகாதாரத்துறை தராமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரும், வசந்தபவன் ஓட்டல் உரிமையாளருமான எம்.ரவி கூறியதாவது: கொரோனா நோயாளிகளுக்கு தமிழக அரசு உணவு வழங்கியதில் ஓட்டல் வியாபாரிகளுக்கு கடந்த 4 மாதமாக ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்கிறது. நோயாளிகள் மற்றும் டாக்டர்களுக்கு உணவு வழங்கியதற்கு பணம் தர மறுக்கிறார்கள். இதில் முதல்வர் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்னையை தீர்த்து வைக்காவிட்டால் ஓட்டல் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.