திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வெங்கடாஜலபதிக்கு ரூ.12.50 லட்சம் மதிப்பில் 13,800 கிராம் எடையுள்ள வெள்ளி அங்கியை தேனி மாவட்டத்தை சேர்ந்த பக்தர் வழங்கினார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் செந்தூர்ராஜ் இன்ஜினியரிங் நிறுவனத்தை சேர்ந்தவர் கிருபாகரன். இவர், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 2வது பிரகாரத்தில் உள்ள வெங்கடாஜலபதிக்கு வெள்ளி அங்கி வழங்குவதாக வேண்டியிருந்தார்.