பைக் மீது லாரி மோதி ஏட்டு பலி

மாமல்லபுரம்: பூஞ்சேரி கூட்ரோடு அருகே பைக் மீது லாரி மோதி படுகாயமடைந்த, தலைமை காவலர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். மாமல்லபுரம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் தணிகைவேல் (45). சதுரங்கப்பட்டினம்  காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்ததார். கடந்த 8ம் தேதி அதிகாலையில் தணிகைவேல், இரவு பணி முடிந்து வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டார். பூஞ்சேரி கூட்ரோடு அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த லாரி,  பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட தணிகைவேல், படுகாயமடைந்தார். இதை பார்த்த பொதுமக்கள், அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தணிகைவேல் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின்படி மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: