வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டையில் இருந்து ராஜகுலம் வரை புறவழிச்சாலை அமைந்துள்ளது. இச்சாலையை ஒட்டி உள்ள களியனூர் கிராமத்தின் அருகில், குறுகிய வளைவு பகுதி உள்ளது. இப்பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் பைக், கார், லாரி, பஸ் உள்பட பல்வேறு வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கின. இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, இந்த சாலை வளைவு பகுதியில் அமைந்துள்ள தரைப்பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகலப்படுத்தப்பட்டது. ஆனாலும், பாலத்தின் மீது செல்லும் வாகனங்கள், விபத்தில் சிக்காமல் இருக்க இருபுறமும் தடுப்புகளை அமைக்காமல், ஒருபுறம் மட்டுமே அமைத்தனர். இதனால், இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகனங்கள், தரைப்பாலத்தின் அருகில் உள்ள வயல்வெளிகளில் கவிழ்ந்து விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது.