ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே 27 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது, ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதில் தற்காலிக தரைப்பாலம் உடைந்து சேதமடைந்தது. இதனால், ஊத்துக்கோட்டைக்கு செல்லும் மக்கள் பாலத்தின் தற்காலிக இரும்பு படிகட்டின் மீது ஏறி ஆற்றை கடந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று காலை புதிய மேம்பாலத்தின் மீது சீத்தஞ்சேரி பஜார் பகுதியை சேர்ந்த சரண்(16). அவரது தாய் ராதாவுடன் சென்றார். அப்போது, மின்வயர் இருப்பது தெரியாமல் அதன் அருகே நின்று தனது செல்போனில் செல்பி எடுத்தார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து காயமடைந்தார்.