திருமயம்: சென்னையில் வீடு, அலுவலகத்தில் 10 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம் சிக்கிய சுற்றுச்சூழல்துறை அதிகாரியின் புதுக்கோட்டை வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். தமிழகத்தில் சுற்றுச்சூழல்துறை அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனையிட்டு கோடிக்கணக்கில் பணம், நகைகள், ஆவணங்களை கைப்பற்றி வருகிறது. அதன்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் வேலூர் காட்பாட்டி காந்திநகரில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலக தலைமை பொறியாளராக பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 3 கோடி பணம், 3.5 கிலோ தங்கம், ஆறரை கிலோ வெள்ளியை கைப்பற்றினர்.
இதேபோல், சென்னை பனகல் மாளிகையில் சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிபவர் பாண்டியன்.