முதல்முறையாக ஆர்.எஸ்.எஸ் பொங்கல் கொண்டாடுகிறது: மோகன் பாகவத் பங்கேற்பு

சென்னை: மாநில ஊடகத்துறை செயலாளர் நரசிம்மன் வெளியிட்ட அறிக்கை: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பொங்கல் திருவிழாவையொட்டி 13, 14 தேதிகளில் சென்னை வரவுள்ளார். அவரது சென்னை பயணம், பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டப்பட்ட தேச சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகும். ஆர்.எஸ்.எஸ் பொங்கல் உட்பட 6 விழாக்களை நாடு முழுவதும் கொண்டாடுகிறது. 14ம் தேதியன்று மூலக்கடை அருகே நடைபெறவுள்ள சமூக பொங்கல் நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பங்கேற்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இளம் தொழில் வல்லுனர்கள் மற்றும் தொழில் முனைவோர்களை சந்திக்கிறார். மேலும் சில முக்கிய நபர்களையும் சந்திக்கவுள்ளார்.ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: