தேவகோட்டை: பருவம் தவறி பெய்த மழையால் தேவகோட்டை தாலுகாவில் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதியில் பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். அறுவடைக்கு தயாரான நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது. பருவம் தவறி பெய்து வரும் மழையால் நெற்கதிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன. ெநற்கதிர்கள் முளைத்து வீணாகி வருகின்றன. வாழைத்தோப்பில் நாள் கணக்கில் தேங்கி நிற்கும் தண்ணீரால் வாழைமரங்கள் அழுகி வருகின்றன.