ஸ்டாலின் முன்னிலையில் ஓய்வு பெற்ற நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன் தி.மு.க.வில் இணைந்தார் !

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன் தி.மு.க.வில் இணைந்தார்.

 மேலும், இந்த நிகழ்வின்போது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, எம்.எல்.ஏ., அந்தியூர் செல்வராஜ், எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, எம்.பி., தலைமைக் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் பி.வில்சன், எம்.பி., வழக்கறிஞர் விக்டர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: