ஸ்ரீபெரும்புதூர்: கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சாம்சன். இவர் ஒரகடம் பகுதியில் உள்ள டயர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு பைக்கில் படப்பை-ஒரத்தூர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரத்தூர் மேம்பாலம் அருகே சென்ற போது இருவர் வாலிபர்கள், சாம்சனை வழிமறித்து கத்தியால் சாம்சனின் கை மற்றும் தலையில் வெட்டி உள்ளனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 200 மற்றும் செல்போனை பறித்து சென்றுள்ளனர்.