சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 9 இணை ஆணையர் அலுவலகங்கள் அண்மையில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த மண்டலங்களில் நடைபெறும் திருப்பணி மற்றும் அன்னதான கூடம், மண்டபம், கோயில் சுற்றுச்சுவர், கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை கண்காணிக்க உதவி பொறியாளர்கள் நியமனம் செய்து கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை இரண்டாவது இணை ஆணையர் மண்டல அலுவலகத்துக்கு உதவி பொறியாளராக சந்திரசேகரன், காஞ்சிபுரம் இணை ஆணையர் அலுவலகத்துக்கு உதவி பொறியாளராக குமரகுருபரன், திருவண்ணாமலை இணை ஆணையர் அலுவலகத்துக்கு உதவி கோட்ட பொறியாளராக வசந்த்,