புதிய இணை ஆணையர் மண்டல அலுவலகங்களுக்கு உதவி பொறியாளர்கள் நியமனம்: கமிஷனர் பிரபாகர் உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 9 இணை ஆணையர் அலுவலகங்கள் அண்மையில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த மண்டலங்களில் நடைபெறும் திருப்பணி மற்றும் அன்னதான கூடம், மண்டபம், கோயில் சுற்றுச்சுவர், கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை கண்காணிக்க உதவி பொறியாளர்கள் நியமனம் செய்து கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை இரண்டாவது இணை ஆணையர் மண்டல அலுவலகத்துக்கு உதவி பொறியாளராக சந்திரசேகரன், காஞ்சிபுரம் இணை ஆணையர் அலுவலகத்துக்கு உதவி பொறியாளராக குமரகுருபரன், திருவண்ணாமலை இணை ஆணையர் அலுவலகத்துக்கு உதவி கோட்ட பொறியாளராக வசந்த்,

நாகப்பட்டினம் இணை ஆணையர் மண்டல அலுவலகத்துக்கு உதவி பொறியாளராக சுகுமாறன், ஈரோடு மண்டல இணை ஆணையர் அலுவலகத்துக்கு உதவி பொறியாளராக சரவணன், திருப்பூர் மண்டல இணை ஆணையர் அலுவலகத்துக்கு உதவி பொறியாளராக கோபாலகிருஷ்ணன், திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் அலுவலகத்துக்கு உதவி செயற்பொறியளராக பரமசிவன், தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அலுவலகத்துக்கு உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், கடலூர் மண்டல இணை ஆணையர் அலுவலகத்துக்கு உதவிக்கோட்ட பொறியாளர் வசந்த் ஆகியோர் முழு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள இணை ஆணையர் பணியிடங்களில் பொறுப்புகளை சுயமாக முழுக் கூடுதல் பொறுப்பில் ஏற்க ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: