ஆலந்தூர்: புழுதிவாக்கம் சித்தேரியின் கரைப்பகுதி சரிந்ததால் தண்ணீர் வெளியேறி, சுற்றுப்பகுதி வீடுகளில் புகுந்தது. சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட புழுதிவாக்கத்தில் 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட சித்தேரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, சமீபத்தில் சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ1.5 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது.