தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. இதன் தொடர் ச்சியாக 12ம் தேதி வரை தமிழகத்தில் கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்யும்.  தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி,  இலங்கை அருகே நகர்ந்து வந்துள்ளது. இதுதவிர குமரி கடல்பகுதியில் உருவான வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியும் இலங்கை மற்றும் மன்னார் வளைகுடா பகுதி வரை பரவியுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யும். பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

Related Stories: