பந்தலூர்: பந்தலூர் அருகே தேவாலா அதிகம் மழைப்பெய்யும் இடமாக உள்ளதால் 2வது சிராபுஞ்சி என்று அழைக்கப்படுகிறது. தேவாலா அருகே மூச்சுக்குன்னு பகுதியில் நீரோடையில் விழும் தண்ணீர் ரம்மியமாக அருவியைபோல் காட்சி தருவதால் சுற்று வட்டார மக்கள் குளித்து மகிழ்வதற்காக தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.