சென்னை: அம்மா மினிகிளினிக்குகளில் மருந்தாளுனர்களை நியமிக்காமல், அவற்றை திறக்க தடை விதிக்க கோரி, சென்னையை சேர்ந்த வசந்த் குமார், கார்த்திக் என்ற இரு மருந்தாளுனர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், பார்மஸி சட்டப்படி மருத்துவர்களோ, மருந்தாளுனர்களோ மருந்து வழங்க விதி உள்ளது.