சென்னை: தனியார் சுயநிதி ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி இயக்ககம் அறிக்கை: தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு பிரிவில் 2020-21 கல்வி ஆண்டுக்கான மாணவ சேர்க்கை நடத்த்தப்பட உள்ளது.அதன்படி B.S.M.S / B.A.M.S / B.H.M.S உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கும் M.D (Homoeopathy) உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கும் மாணவ சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இளங்கலை படிப்புகளை தேர்ந்தெடுக்க விரும்புவர்கள் ப்ளஸ் 2 முடித்து 2020 நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை படிக்க விரும்புவர்கள் AIAPGET - 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.