சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சாம்ராஜ்நகர்: சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளிக்கு 5 வருடம் சிறைத்தண்டனை மற்றும் ரூ.25,500 அபராதம் விதித்து நீதிபதி சதாசிவ சுல்தான் புரி உத்தரவிட்டார். சாம்ராஜ்நகர், எலந்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். இவர் கடந்த 2018ம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்க சென்றிருந்தபோது பின்தொடர்ந்து சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். சிறுமி கூச்சல் போட்டதால் அருகில் இருந்தவர்கள் வந்து யோகேஷை தட்டி கேட்டபோது அவர்களை தாக்கி விட்டு தலைமறைவானார். யோகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குற்றவாளியான யோகேசுக்கு 5 வருட சிறைத்தண்டனையும், ரூ.25,500 அபராதமும் விதித்து மாவட்ட நீதிபதி சதாசிவ சுல்தான் புரி தீர்ப்பளித்தார்.

Related Stories: