திருவில்லிபுத்தூரில் கலர் கோலப்பொடி தயாரிக்கும் பணி தீவிரம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் கலர் கோலப்பொடி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் வீடுகளில் வண்ண வண்ண கலரில் கோலம் போடுவதற்காக அதிகளவு கோலப்பொடிகளை வாங்கி செல்கின்றனர். இதையடுத்து திருவில்லிபுத்தூரில் கலர் கோலப்பொடி தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது. இரவு, பகலாக கோலப்பொடி தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இது குறித்து திருவில்லிபுத்தூர் பேட்டை கடை தெருவில் கலர் பொடி தயாரிக்கும்  சேகர்(40) கூறுகையில்,‘‘ சுமார் 30 ஆண்டுக்கும் மேலாக கலர் கோலப்பொடி தயாரித்து வருகிறோம். 50 காசு பாக்கெட்டில் இருந்து ரூ.50 பாக்கெட் வரை தயாரித்து வருகிறோம்.

எங்களிடம் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, ரோஸ், ஊதா, கருப்பு, நீலம் வயலட் உள்பட அனைத்து கலர்களிலும் தயாரித்து வருகிறோம். பொங்கல் நெருங்குவதை முன்னிட்டு ஏராளமானோர் கோலப்பொடி வாங்கிச் செல்கின்றனர்.,’’என்றார். 

Related Stories: