நாங்குநேரி: நாங்குநேரியில் பராமரிப்பின்றி சேதமடைந்த சிவன் கோயில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் பக்தர்கள் உள்ளனர். நாங்குநேரியில் உள்ள சிவகாமி அம்பாள் சமேத திருநாகேஸ்வரர் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இருப்பினும் முறையான பராமரிப்பில்லா இவ்வாலயம் தற்போது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. கும்பாபிஷேகம் நடத்தி ஆண்டுகள் பல ஆனதால் கோயில் கட்டிடங்கள் சிதிலமடைந்து வருகின்றன. அத்துடன் திருப்பணிகள் எதுவும் முழுமையாக நடைபெறாததால் கோயில் வளாகத்தை புதர்கள் ஆக்கிரமித்து மண்டிக் கிடக்கின்றன.