பள்ளிகள் திறப்புக்குக் கருத்துக் கேட்பு கூட்டம் நாளைக்குள் முடிக்க அறிவுறுத்தல்: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: சென்னை: பள்ளிகள் திறப்புக்குக் கருத்துக் கேட்பு கூட்டம் நாளைக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது. பொங்கலுக்குப் பிறகு பள்ளிகளைத் திறப்பது குறித்து நாளை மாலைக்குள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரிடம் நாளைக்குள் கருத்துக் கேட்டு முடிக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. பெற்றோரிடம் பெறப்பட்ட கருத்து தொகுப்பினை நாளை மாலை 5 மணிக்குள் தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: