சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் மாணவர்கள் ஓட்டிவந்த கார் மோதியதில் சிக்னல் கம்பம் முறிந்து விழுந்தது. இதில், மாணவர்கள் காயங்களுடன் உயிர்தப்பினர். மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு அதிவேகமாக ஒரு கார் வந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நடேசன் சாலை சந்திப்பில் உள்ள சிக்னல் கம்பம் மீது பயங்கரமாக மோதியது. இதில், சிக்னல் கம்பம் முறிந்து விழுந்தது. காரின் முன்பக்கம் முற்றிலும் நொறுங்கியது. காரில் இருந்த ‘ஏர் பேக்’ திறந்ததால் உள்ளே இருந்த 2 வாலிபர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.