சென்னை: 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் சாலை ஆய்வாளர்கள் நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் சங்கம் கிண்டி நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகம் முன்பு ஜனவரி 5ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தது. அதன்பேரில், 100க்கும் மேற்பட்டோர் கொட்டு மழையில் குடை பிடித்தப்படி நேற்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.