12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் சாலை ஆய்வாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகம் பரபரப்பு

சென்னை: 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் சாலை ஆய்வாளர்கள் நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் சங்கம் கிண்டி நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகம் முன்பு ஜனவரி 5ம் தேதி  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தது. அதன்பேரில், 100க்கும்  மேற்பட்டோர் கொட்டு மழையில் குடை பிடித்தப்படி நேற்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சாலை ஆய்வாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், நெடுஞ்சாலைத்துறை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதைதொடர்ந்து, சாலை ஆய்வாளர் சங்க பொதுச்செயலாளர் குருசாமி,5 பேர் கொண்ட குழுவினர் முதன்மை இயக்குனர் கோதண்டராமனை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

Related Stories: