திருக்கோவிலூர்: விழுப்புரம் அருகே பொங்கல் பரிசு தொகையை வேளாண் அதிகாரிகள் தட்டிப்பறித்தனர். இதை கண்டித்து ரேஷன் கடையை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லூர் கிராமத்தில் சுமார் 5ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் உள்ள 826 குடும்ப அட்டைகளுக்கு அரசின் பொங்கல் பரிசு ரூ.2500 மற்றும் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது. அப்போது அங்கு வந்த முகையூர் வேளாண்மை வட்டார விரிவாக்க மைய அலுவலர்கள் சிலர் பொங்கல் பரிசு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் இருந்து குடும்ப அட்டைகளை வாங்கினர்.