பொன்னமராவதி பகுதியில் தொடர் மழையால் வயல்களில் சாய்ந்து சேதமடைந்த நெற்பயிர்கள்-விவசாயிகள் கவலை

பொன்னமராவதி : பொன்னமராவதி பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் வயல்களில் நெற்கதிர்கள் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் கடந்த 4 நாட்களாக சாரல் மழை பெய்தது. இதில் குளம், குட்டைகள் ஒரு சிலவைகள் தவிர 99 சதவீதம் நிரம்பவில்லை. ஆனால் வயல்களில் மழைநீர் தேங்கி சாகுபடி செய்துள்ள நெற்கதிர்கள் சாய்ந்துள்ளது.

அறுடை செய்ய வேண்டி நேரத்தில் இந்த தூரல் மழையால் கைக்கு வந்த நெல் மற்றும் வைக்கோல் சேதமாகின. இதேபோல் நிலக்கடலை, துவரை, உளுந்து, தட்டப்பயிர் போன்றவைகளும் சாரல் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் நெற்பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: