அபுதாபி விமானத்தில் கோளாறு: 46 பயணிகள் உயிர் தப்பினர்

சென்னை: சென்னையிலிருந்து அபுதாபிக்கு செல்லும் எத்தியார்டு ஏர்லைன்ஸ் சிறப்பு  விமானம் நேற்று அதிகாலை 3.50 மணிக்கு சென்னை சர்வதேச  விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் 38 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உட்பட 46 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் செல்லத்தொடங்கியது. அப்போது விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுப்பிடித்தார்.இதனால் விமானத்தை அவசரமாக ஓடுபாதையிலேயே விமானி நிறுத்தினார். அதோடு விமான கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார். உடனடியாக விமானம் இழுவை வண்டிகள் மூலம் ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட இடத்திற்கே இழுத்து வரப்பட்டது.

விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமான பொறியாளர்கள் விமானத்திற்குள் ஏறி, இயந்திரக்கோளாறை சரிசெய்ய முயன்றனர். ஆனால் உடனடியாக  சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து நேற்று காலை 6 மணிக்கு விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டனர். அதன்பின்பு சென்னை நகரில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானம் பழுது பார்க்கப்பட்டு இரவு புறப்பட்டு செல்கிறது.

Related Stories: