சென்னை: சென்னையிலிருந்து அபுதாபிக்கு செல்லும் எத்தியார்டு ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று அதிகாலை 3.50 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் 38 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உட்பட 46 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் செல்லத்தொடங்கியது. அப்போது விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுப்பிடித்தார்.இதனால் விமானத்தை அவசரமாக ஓடுபாதையிலேயே விமானி நிறுத்தினார். அதோடு விமான கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார். உடனடியாக விமானம் இழுவை வண்டிகள் மூலம் ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட இடத்திற்கே இழுத்து வரப்பட்டது.