சென்னை: தென் பிராந்திய ராணுவ தலைமை தளபதியாக தமிழகத்தை சேர்ந்த லெப்டினென் ஜெனரல் அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழநாடு, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களின் ராணுவ தலைமையகம் சென்னையில் இயங்கி வருகிறது. இதன் தலைமை தளபதியாக பணியாற்றி வந்த பி.என்.ராவ் கடந்த 30ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து தென்பிராந்திய தலைமை தளபதியாக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சென்னையில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதன் பிறகு தீவுத் திடல் எதிரே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திண்டுக்கல் மாவட்டத்தில் 1964ம் ஆண்டு பிறந்த இவர், 1982ம் ஆண்டில் தேசிய ராணுவ அகாடமியில் சேர்ந்தார். வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.