கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்காத நட்சத்திர ஓட்டல்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்: நிகழ்ச்சி பட்டியலை தயாரிக்கிறது

சென்னை: சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்காத நிர்வாகங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்களிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. அதன்படி 25 நட்சத்திர ஓட்டல்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இன்னும் 3 நாட்களுக்குள் இப்பணி நடந்து முடிந்துவிடும். இந்நிலையில் சென்னையில் உள்ள 25 முக்கிய நட்சத்திர விடுதியில் 15 நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற திருமணம், பிறந்த நாள் கொண்டாட்டம், மீட்டிங், கருத்தரங்கம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகள் தொடர்பான தகவலை சென்னை மாநகராட்சி சேகரித்து வருகிறது. மேலும், ஏற்கனவே தமிழக அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மீண்டும் ஓட்டல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

Related Stories: