சென்னை: சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்காத நிர்வாகங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்களிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. அதன்படி 25 நட்சத்திர ஓட்டல்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.