சென்னை: எழுத்தாளர் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர் இளவேனில் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 1970களில் கலை மக்களுக்காக என்ற அடிப்படையில் இளவேனில் படைப்புகள் அமைந்தன. சிம்சன் தொழிலாளர்கள் வீறுகொண்டு போராட்டம் நடத்திய போது, அந்த போராட்டக் களத்திற்கே நேரில் சென்று வி.பி.சிந்தன் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி போராட்டத்தைப் பற்றிய கவிதையும், கட்டுரையும் எழுதியவர்.